Monday, March 2, 2009

இதயம் தின்றவள்...!!

உன் நினைவுகளுடனே என் பேருந்து பயணம்..
படி பற்ற தவறியது என் கால்
நிலை தடுமாறி ..
தலை சக்கரத்தில் சிக்கி
முதுகெலும்பு உடைந்து
மார்புகூடு நசுங்கி...
அதோ பார்..!!
துண்டித்து விழுந்து துடிக்கிறது இதயம்
உன் பெயருடன் முகவரி சொல்லி..
கதவு தட்டப்படும் திற..
அன்று நம்ப மறுத்தாய்!!
வந்து பார்!
என் இதயச் சுவரெங்கும் இடைவெளி இல்லாமல்
உன் பெயரை!!!.





No comments: