ரேகை எண்ணி
காலம் கணிக்க முடியாது!
தடமற்றவைகள்...
என் கைகள்!!
நேற்று பிறந்த குழந்தைகளை
தொட்டுவிடும் தூரத்தில் இருந்தும்
ஸ்பரிசித்ததில்லை
மென்தசையூடே பாயும்
குருதி தடுக்கும் கைகளை
பிரயோகிக்க மனம் கூடாமல்!!
பாரம்கொண்ட மூடை, சந்துசட்டி
ஓட்டுனர் வளையம், வெட்டரிவாள்
கடப்பாரை, மண்வெட்டி, மூக்கணாங்கயிறு
காலம் பார்க்காமல் வேகம் காட்டும்
கைகள்!!
பணவீக்கமோ? பொருளாதார மந்தமோ?
வளர்ச்சியோ? வீழ்ச்சியோ?
யாசகம் கேட்டதில்லை...!!
கைகளின் வேகம் மட்டுமே
கூடிப் போகும்!!
காலம் கணிக்காத கணிப்பொறி
துறை வெளியேற்றினாலும்
பொறியாளர் மகனின் குடும்பத்தை
காத்துக்கொள்ளும் என் கைகள்
இறக்கைக்குள் குஞ்சைக் காக்கும்
கோழி போல் அல்ல!!!
இராணுவ வீரனைக் காக்கும்
பதுங்கு குழியைப் போல...!!!

1 comment:
hi dharma
Nice to create a blog.
Keep it up
mani
Post a Comment