Monday, April 20, 2009

ஒரு மவுனம் இன்று கலைகிறது!!

என் முழு நேர பிரயத்தனங்களில்
இசையவில்லை உன் மனம்
வலி கூடிப்போனது..!!


நண்பர்களுடனான
கதையாடல்களில்
விளையாட்டில் ஆர்வம் என்றாய்!
கன்னச் சதை தெறிக்க ஓடி
வாங்கிய கோப்பை நிரம்பிப் போனது...
நீ சிந்திய கண்ணீர்களால்!!!.


ஆங்கில அலைகளில் அமிழ்ந்து போன
நகராட்சிப் பள்ளி மாணவன் நான்!!
கல்லூரி முதலிறிதித் தேர்விலேயே
தோற்றுப் போய்...
சுவர் முட்டலில்
குருதி காட்டுகிறது நெற்றி...
சிரித்துக் கொண்டே இருந்தாய் நீ!!


என் வெற்றியில்தான் உன் அழுகையே??
புன்னகை காட்டும் போதெல்லாம்
தோற்றுப் போயிருப்பேன் நான்!!.


மறதி மறைத்து
திருமண அழைப்பிதழ் நீடிவிட்டுப்
போகிறாய்!!
மனதிற்கும் மூளைக்குமான
வெவ்வேறு திசை இயக்கங்களில்
குழம்பிப் போனவன் தெளிகிறேன்!!
என் தோல்வித் தருணங்களில் எல்லாம்
வெற்றி பெற்றவன் என் நண்பன்!!.

No comments: